தேசிய புலனாய்வுத்துறை

ஈரோடு: கோயம்புத்தூரில் நடந்த கார் குண்டுவெடிப்பு தொடர்பாக தேசிய புலனாய்வுத் துறை அதிகாரிகள் இதுவரை 14 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். அந்த விசாரணையில் அந்தக் குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்கள் ஈரோடு மாவட்டத்தின் சத்திய மங்கல வட்டாரத்தைச் சேர்ந்த கடம்பூர் காட்டுப் பகுதிகளில் ரகசியக் கூட்டங்கள் நடத்தியது தெரிய வந்துள்ளது.